/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நெற்பயிரை நாசம் செய்த யானை விரட்டியடிப்பு
/
நெற்பயிரை நாசம் செய்த யானை விரட்டியடிப்பு
ADDED : ஜன 10, 2026 08:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்: அந்தியூரை அடுத்த கும்பரவாணி அருகே பழைய லைன் மாரி-யம்மன் கோவில் வனப்பகுதியில் இருந்து நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு ஆண் யானை வெளியேறியது. வனத்தை ஒட்டிய முறிக்காரர் தோட்டத்தில் குமாருக்கு சொந்தமான நெல் வயலில் புகுந்தது. தின்றும், மிதித்தும் சேதம் செய்தது.
சத்தம் கேட்டு திரண்ட விவசாயிகள், தீப்பந்தம் காட்டியும், பட்-டாசு வெடித்தும் போராடி யானையை விரட்டினர். அங்கிருந்து சென்ற யானை, சரசாள் என்பவரது நெல் வயலை சேதம் செய்-தது. இங்கு ஒரு மணி நேரம் விவசாயிகள் போராடி விரட்டிய பிறகு வனத்துக்குள் சென்றது.

