ADDED : மார் 25, 2024 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்:தாராபுரம்,
கொண்டரசம்பாளையத்தை சேர்ந்தவர் மதிவாணி, 34; இந்து மக்கள் கட்சி
மகளிரணி நிர்வாகி.
மற்றொரு மாவட்ட நிர்வாகி சங்கர். இருவருக்கும்
கொடுக்கல், வாங்கல் இருந்தது. இது தொடர்பாக நேற்று இருவருக்கும் வாய்
தகராறு ஏற்பட்டது. அப்போது சங்கர், சுரபிமணி ஆகியோருக்கும்,
மதிவாணிக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் காயமடைந்த மதிவாணி,
தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில், சங்கர், சுரபி மணியை, தாராபுரம் போலீசார்
கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

