/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பா.வெ.பாளையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
/
பா.வெ.பாளையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : ஜூலை 09, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கோபி தாலுகா பா.வெள்ளாளபாளையம் கிராமத்தில், பயன்பாட்டில் உள்ள தார்ச்சாலையை, 14 பேர் 30 சென்ட் அளவுக்கு ஆக்கிரமித்திருந்தனர். இதுகுறித்து பஞ்., நிர்வாகம் வருவாய்த்துறையிடம் கோரிக்கை விடுத்தது. கடந்த, 2024 அக்.,23ல் அளவீடு செய்து
ஆக்கிரமிப்பும் உறுதி செய்யப்பட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களுக்கு வருவாய்த்துறை நோட்டீஸ் அனுப்பினர். அவகாசம் முடிந்தும் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. இதனால் கோபி தாசில்தார் சரவணன் உத்தரவின்படி, பொக்லைன் இயந்தரம் மூலம், ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறையினர் நேற்று அகற்றினர்.