/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தொடர் விடுமுறை எதிரொலி வெறிச்சோடிய ஈரோடு மாநகரம்
/
தொடர் விடுமுறை எதிரொலி வெறிச்சோடிய ஈரோடு மாநகரம்
ADDED : ஜன 16, 2026 04:26 AM
ஈரோடு: பொங்கல் பண்டிகையையொட்டி ஜன.14 முதல், 18 வரை, ஐந்து நாட்கள் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்-ளது.
இதனால் ஈரோடு மாநகரில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் நிறு-வனங்களில் பணியாற்றும் வெளியூரை சேர்ந்தவர்கள் நேற்று முன்-தினம் முதலே சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதனால் மாநகரின் முக்கிய சாலைகளான மேட்டூர் ரோடு, சத்தி ரோடு, பெருந்துறை ரோடு, மீனாட்சி சுந்தரனார் சாலை, காந்திஜி ரோடு உள்ளிட்ட சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்-சோடி காணப்பட்டது. அதேபோல் பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் வழக்கத்தை விட குறைவான பயணிகளே இருந்தனர்.
கடைவீதி பகுதிகளான மணிக்கூண்டு, ஆர்.கே.வி ரோடு, ஈஸ்-வரன் கோவில் வீதி ஆகிய இடங்களிலும் சொற்ப அளவிலான மக்கள் கூட்டமே இருந்தது. வழக்கமாக எப்போதுமே பரபரப்-பாக இருக்கக்கூடிய கனி மார்க்கெட் வளாகமும் வெறிச்சோடியது.

