ADDED : நவ 01, 2024 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு கல்லுாரி மாணவர் மாயம்
ஈரோடு, நவ. 1-
ஈரோடு, சூரம்பட்டிவலசு அணைகட்டு எம்.எஸ்.கே. நகர் ஜெகதீஷ் மகன் யோகேந்திரன், 19. ஈரோட்டில் உள்ள கல்லுாரி ஒன்றில், இரண்டாம் ஆண்டு பி.எஸ்சி., படித்து வருகிறார். கடந்த, 29 காலை, 7:00 மணிக்கு கல்லுாரி செல்வதாக, தன் பாட்டியிடம் கூறி வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து யோகேந்திரன் குடும்பத்தினர், சூரம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளனர்.