ADDED : ஜன 06, 2025 02:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், அண்ணாதுரை மாரத்தான் ஓட்டப்பந்தயம், ஈரோட்டில் நேற்று நடந்தது.
வ.உ.சி., விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய போட்டியை, ஈரோடு ஏ.டி.எஸ்.பி., விவேகானந்தன், டவுன் டி.எஸ்.பி முத்துக்-குமரன் துவக்கி வைத்தனர். சூளை, கனிராவுத்தர்குளம், தண்ணீர்-பந்தல் பாளையம் (டி--மார்ட்) வரை நடந்தது. ஆண், பெண்க-ளுக்கு தனித்தனியாக போட்டி நடத்தப்பட்டது. இதில், 60 பேர் மட்டுமே பங்கேற்றனர்.