sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அரசு மருத்துவமனையில்தற்கொலை தடுப்பு முகாம்

/

அரசு மருத்துவமனையில்தற்கொலை தடுப்பு முகாம்

அரசு மருத்துவமனையில்தற்கொலை தடுப்பு முகாம்

அரசு மருத்துவமனையில்தற்கொலை தடுப்பு முகாம்


ADDED : செப் 08, 2011 03:02 AM

Google News

ADDED : செப் 08, 2011 03:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு அரசு மருத்துவமனையில், தன்வந்திரி நர்ஸிங் கல்லூரி சார்பில், தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் பேசுகையில், ''அரசு மருத்துவமனையில் செயல்படும் மன நலப் பிரிவில், 2011 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 437 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.தற்கொலை முயற்சியில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்படுவோருக்கு, மன நலப் பிரிவு சார்பில் இலவச ஆலோசனை வழங்கப்படுகிறது,'' என்றார்.

மன நலப் பிரிவு டாக்டர் ஆனந்த குமார் பேசுகையில், ''18 முதல் 25 வயது இளைஞர்களிடம் அதிகளவில் தற்கொலை எண்ணம் மேலோங்குகிறது.

வீடு, அலுவலகம், சமுதாயம் என பல வழிகளிலும், மன அழுத்தத்துக்கு ஆளாவதால், மனதில் தற்கொலை எண்ணம் எழுகிறது. தற்கொலை எண்ணத்தை கைவிட, அரசு மருத்துவமனையில் ஆலோசனை வழங்கப்படுகிறது,'' என்றார்.கல்லூரி முதல்வர் அர்விந்த்பாபு, மனநல பிரிவு டாக்டர் முனிராஜ், மன நல பிரிவு ஊழியர்கள் வனஜா, செந்தில்குமார், கவிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us