sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரத்தான ரயில்கள் மீண்டும் இயக்கம்

/

ரத்தான ரயில்கள் மீண்டும் இயக்கம்

ரத்தான ரயில்கள் மீண்டும் இயக்கம்

ரத்தான ரயில்கள் மீண்டும் இயக்கம்


ADDED : செப் 16, 2011 01:28 AM

Google News

ADDED : செப் 16, 2011 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: அரக்கோணத்தில் நடந்த ரயில் விபத்து காரணமாக ரத்து செய்யப்பட்ட ரயில்கள் நேற்று முதல் வழக்கம் போல் இயங்கின.

கடந்த 13ம் தேதி இரவு அரக்கோணம் அருகே சித்தேரியில் சிக்னலுக்காக நின்றிருந்த பாசஞ்சர் ரயில் மீது மின்சார ரயில் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. அதனால், காட்பாடி வழியே செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. சில ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. குறிப்பாக, கடந்த 13ம் தேதி இரவு 10.40 மணிக்கு சென்னையிலிருந்து ஈரோடு வரும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில், தூரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை ரத்து செய்யப்பட்டன.



நேற்று முன்தினம் இரவு ஈரோட்டிலிருந்து புறப்படும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில், கோவையில் இருந்து புறப்படும் சேரன், மேட்டுப்பாளையத்திலிருந்து புறப்படும் புளு மவுண்டன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. சில ரயில்கள் காலதாமதமாக இயக்கப்பட்டன. நேற்று முன்தினம் இரவு ரயில் பாதை சீரமைப்பு பணி முடிந்தது. ஈரோட்டிலிருந்து புறப்பட்டு செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் உள்பட அனைத்து ரயில்களும் நேற்று வழக்கம் போல் புறப்பட்டு சென்றன.








      Dinamalar
      Follow us