ADDED : செப் 28, 2011 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்: அந்தியூரிலிருந்து பர்கூர் வழியாக, கர்நாடகா மாநிலத்துக்கு
ரேஷன் அரிசி கடத்துவதாக தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
எஸ்.ஐ., ரவி தலைமையிலான தனிப்படை போலீஸார், அந்தியூர் புதுப்பாளையத்தில்
வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே கர்நாடக சென்ற லாரியை
நிறுத்தி சோதனை செய்தனர்.லாரியில் 900 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி
வைத்திருந்தது தெரியவந்தது. கடத்தலில் ஈடுபட்ட கர்நாடக மாநிலம், ராமபுரத்தை
சேர்ந்த லாரி டிரைவர் நடேசனை (50) போலீஸார் கைது செய்தனர். லாரியில் 900
கிலோ ரேஷன் அரிசி மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர்.