/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெருந்துறை யூனியனில் 9 ஓட்டுச்சாவடி பதட்டம்
/
பெருந்துறை யூனியனில் 9 ஓட்டுச்சாவடி பதட்டம்
ADDED : செப் 30, 2011 01:53 AM
பெருந்துறை: பெருந்துறை யூனியனில் ஒன்பது ஓட்டுசாவடிகள் பதட்டமானவை என
கண்டறிப்பட்டுள்ளது.கள்ளியம்புதூர்: பெருந்துறை அ.தி.மு.க., ஒன்றிய
செயலாளர் விஜயன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் சாமி, கம்யூனிஸ்ட் ஒன்றிய
செயலாளர் திருநாவுக்கரசு, தே.மு.தி.க., ஒன்றிய செயலாளர் ராஜலிங்கம் ஆகியோர்
யூனியன் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவதால், இங்குள்ள
ஓட்டுச்சாவடி பதட்டமானதாக கருதப்படுகிறது.பெரியவேட்டுவபாளையம்: இங்கு 2011
சட்டசபை தேர்தலின் போது, போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல்
ஏற்பட்டது. போலீஸார் லேசாக தடியடி நடத்தினர். அங்குள்ள ஓட்டுச்சாவடியில்
மீண்டும் பதட்டம் ஏற்படலாம் என்று கருதி, போலீஸார் கூடுதல் கவனம்
செலுத்துகின்றனர்.சேர்வக்காரன்பாளையம்: மூங்கில்பாளையம் கிராம பஞ்சாயத்து
தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., சார்பில் , பெரியப்பன் என்ற அருணாசலம்
போட்டியிடுகிறார். தி.மு.க.சார்பில் அவர் தம்பி சின்னப்பன் என்கிற
முத்துசாமி போட்டியிடுகிறார்.
இருவருக்கு இடையே குடும்ப தகராறு உள்ளது.
அவர்களின் சொந்த ஊரான சேர்வகாரன்பாளையம் ஓட்டுச்சாவடியில் பதட்டம்
ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.கீழேரிபாளையம்: இங்கு இரண்டு
ஜாதிக்காரர்கள் சம பங்கு பலத்தில் இருப்பதால், போலீஸாரின் கவனம்
திரும்பியுள்ளது.கருமாண்டிசெல்லிபாளையம்: இங்கு தலைவர் பதவிக்கும், வார்டு
கவுன்சிலர்கள் பதவிக்கும் போட்டியிடுபவர்கள், பணம் மற்றும் அரசியலில் பலம்
வாய்ந்தவர்கள் என்பதால், போலீஸார் கூடுதல கவனம் செலுத்துகின்றனர்.
இவை ஐந்து கிராமங்களுக்கு உட்பட்ட ஒன்பது ஓட்டுச்சாவடிகள் பதட்டம் நிறைந்தவையாக கணிக்கப்பட்டுள்ளது.

