sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பெருந்துறை யூனியனில் 9 ஓட்டுச்சாவடி பதட்டம்

/

பெருந்துறை யூனியனில் 9 ஓட்டுச்சாவடி பதட்டம்

பெருந்துறை யூனியனில் 9 ஓட்டுச்சாவடி பதட்டம்

பெருந்துறை யூனியனில் 9 ஓட்டுச்சாவடி பதட்டம்


ADDED : செப் 30, 2011 01:53 AM

Google News

ADDED : செப் 30, 2011 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை: பெருந்துறை யூனியனில் ஒன்பது ஓட்டுசாவடிகள் பதட்டமானவை என கண்டறிப்பட்டுள்ளது.கள்ளியம்புதூர்: பெருந்துறை அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் விஜயன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் சாமி, கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு, தே.மு.தி.க., ஒன்றிய செயலாளர் ராஜலிங்கம் ஆகியோர் யூனியன் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவதால், இங்குள்ள ஓட்டுச்சாவடி பதட்டமானதாக கருதப்படுகிறது.பெரியவேட்டுவபாளையம்: இங்கு 2011 சட்டசபை தேர்தலின் போது, போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீஸார் லேசாக தடியடி நடத்தினர். அங்குள்ள ஓட்டுச்சாவடியில் மீண்டும் பதட்டம் ஏற்படலாம் என்று கருதி, போலீஸார் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர்.சேர்வக்காரன்பாளையம்: மூங்கில்பாளையம் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., சார்பில் , பெரியப்பன் என்ற அருணாசலம் போட்டியிடுகிறார். தி.மு.க.சார்பில் அவர் தம்பி சின்னப்பன் என்கிற முத்துசாமி போட்டியிடுகிறார்.

இருவருக்கு இடையே குடும்ப தகராறு உள்ளது. அவர்களின் சொந்த ஊரான சேர்வகாரன்பாளையம் ஓட்டுச்சாவடியில் பதட்டம் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.கீழேரிபாளையம்: இங்கு இரண்டு ஜாதிக்காரர்கள் சம பங்கு பலத்தில் இருப்பதால், போலீஸாரின் கவனம் திரும்பியுள்ளது.கருமாண்டிசெல்லிபாளையம்: இங்கு தலைவர் பதவிக்கும், வார்டு கவுன்சிலர்கள் பதவிக்கும் போட்டியிடுபவர்கள், பணம் மற்றும் அரசியலில் பலம் வாய்ந்தவர்கள் என்பதால், போலீஸார் கூடுதல கவனம் செலுத்துகின்றனர்.

இவை ஐந்து கிராமங்களுக்கு உட்பட்ட ஒன்பது ஓட்டுச்சாவடிகள் பதட்டம் நிறைந்தவையாக கணிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us