ADDED : அக் 12, 2011 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: தே.மு.தி.க., வேட்பாளர்களை ஆதரித்து ஈரோட்டில் நாளை விஜயகாந்த்
பிரச்சாரம் மேற்கொள்கிறார்.ஈரோடு மாநகராட்சி மேயர் பதவிக்கு தே.மு.தி.க.,
சார்பில் இமயம் சிவக்குமார் போட்டியிடுகிறார்.
அவரையும், தே.மு.தி.க.,
மற்றும் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் வேட்பாளர்களை ஆதரித்து, கட்சி
தலைவர் விஜயகாந்த் நாளை ஈரோட்டில் பிரச்சாரம் செய்கிறார். நாளை மாலை 4
மணிக்கு பி.பி.அக்ரஹாரத்தில் பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் விஜயகாந்த்,
கிருஷ்ணம்பாளையம், கருங்கல்பாளையம், வி.வி.சி.ஆர்., நகர், 6 மணிக்கு
மரப்பாலம், நாடார்மேடு, இரவு 7 மணிக்கு சூரம்பட்டி வலசு, வீரப்பன்சத்திரம்,
8 மணிக்கு கனிராவுத்தர் குளத்தில் பிரச்சாரம் செய்கிறார்.

