/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் முன்பகுதி தற்காலிகமாக மூடல்
/
ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் முன்பகுதி தற்காலிகமாக மூடல்
ADDED : டிச 29, 2024 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு ரயில்வே ஸ்டேஷன்
முன்பகுதி தற்காலிகமாக மூடல்
ஈரோடு, டிச. 29-
ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாட்டு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி ஸ்டேஷன் முன் பகுதியில் மேம்பாட்டு பணி தொடங்கியுள்ளது. இதற்காக முன்புற பகுதி (உள்ளே செல்லும் வழி, வெளியே செல்லும் வழி) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ரயில்வே ஸ்டேஷனின் மற்றொரு பாதை, கூட்ஸ் ஷெட் வழியே பயணிகள் வந்து, செல்ல வழி விடப்பட்டுள்ளது. மேம்பாட்டு பணி நிறைவு பெறும் வரை முன்பகுதி மூடப்பட்டிருக்கும் என்று, ரயில்வே துறையினர் தெரிவித்தனர்.

