ADDED : அக் 17, 2025 01:24 AM
அ நிறம் | அளவு
ஈரோடு, தீபாவளி பண்டிகை வரும், 20ல் கொண்டாடப்படுகிறது. வழக்கமாக சென்னைக்கு தீயணைப்பு வீரர்கள் தீத்தடுப்பு பணிக்கு அழைக்கப்படுவது வழக்கம்.
நடப்பாண்டும் அழைக்கப்பட்டுள்ளனர். இதன்படி ஒரு தீயணைப்பு வாகனம், 14 தீயணைப்பு வீரர்கள் சென்னைக்கு இன்று மாலை புறப்படுகின்றனர். 22ம் தேதி அதிகாலை வரை பணியில் இருப்பர் என்று, மாவட்ட தீயணைப்பு அலுவலர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
