ADDED : மார் 22, 2026 07:17 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில் சட்டசபை தேர்தலுக்காக மின்னணு ஓட்-டுப்பதிவு
இயந்திரங்களுக்கான (இ.வி.எம்.,) முதற்கட்ட சுழற்சி,
அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சி பிரதிநிதிகள்
முன்னிலையில், கலெக்டர் கந்தசாமி தலைமையில் கலெக்டர் அலுவலக முதல்
தள கூட்ட அரங்கில், நாளை காலை, 10:00 மணிக்கு நடக்க உள்ளது.
இதையடுத்து,
24ம் தேதி காலை, 6:00 மணி முதல் அந்தந்த தொகுதிகளுக்கு
இயந்திரங்கள் பிரித்து அனுப்பப்படும். இக்கூட்டத்தில் எட்டு
சட்டசபை தேர்தல் நடத்தும் அலுவலர், எஸ்.பி., - டி.எஸ்.பி.,க்கள் உதவி
தேர்தல் நடத்தும் அலுவலர், சம்பந்தப்பட்ட அலுவலர்கள்
பங்கேற்கவுள்-ளனர்.
