தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பா.ம.க., கொடிக்கம்பம் அகற்றம் போலீசாருடன் நிர்வாகிகள் வாக்குவாதம்

பா.ம.க., கொடிக்கம்பம் அகற்றம் போலீசாருடன் நிர்வாகிகள் வாக்குவாதம்

பா.ம.க., கொடிக்கம்பம் அகற்றம் போலீசாருடன் நிர்வாகிகள் வாக்குவாதம்


ADDED : பிப் 11, 2025 07:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2025 07:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆத்துார்: பா.ம.க., கொடிக்கம்பம் அகற்றச் சென்றபோது, போலீசாருடன் நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே தென்னங்குடிபாளை-யத்தில் நேற்று, பா.ம.க., மாவட்ட செயலர்

ஜெயபிரகாஷ் தலை-மையிலான கட்சியினர், கான்கிரீட் பீடம் அமைத்து, கொடிக்-கம்பம் அமைக்கும்

பணியில் ஈடுபட்டனர். அதையறிந்த, ஆத்துார் டவுன் போலீசார், வருவாய்த்துறையினர் நேரில் சென்று,

அனுமதியின்றி கொடிக்கம்பம் அமைக்கக் கூடாது என்றனர். மாவட்ட செயலர் உள்ளிட்ட கட்சியினர்,

'1989ல், கொடிக்கம்பம் இருந்தது. அதே இடத்தில் மீண்டும் கொடிக்கம்பம் அமைக்கப்ப-டுகிறது'

என்றனர்.அதற்கு போலீசார், 'பழைய கொடிக்கம்பம் இருந்ததற்கான ஆதாரம் கொடுத்துவிட்டு, பணிகள்

மேற்கொள்ளலாம்' என்றனர். அப்போது, போலீசாருடன், பா.ம.க.,வினர் வாக்குவாதம் செய்-தனர்.ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார், 'அனுமதி பெற்று கொடிக்-கம்பம் அமைக்க வேண்டும். அவ்வாறு இல்லை

எனில் நடவ-டிக்கை எடுக்கப்படும்' என்றார். அதன்பின், கொடிக்கம்பம் பீடம் மற்றும் கொடியை அகற்றிக்

கொண்டனர். இச்சம்பவத்தால், அப்-பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us