/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நெல் கொள்முதல் நிலையம் அமைக்க எதிர்பார்ப்பு
/
நெல் கொள்முதல் நிலையம் அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : டிச 29, 2025 09:48 AM
ஈரோடு: பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் முதல் போக பாசனத்தில், தற்போது நெல் அறுவடை துவங்கியுள்ளது. எனவே விரைந்து நெல் கொள்முதல் நிலை-யத்தை திறக்க, கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
கீழ்பவானி வாய்க்கால் பாசனத்தில் நடப்-பாண்டு, பெரும்பாலும் பவானி, ஐ.ஆர்.20, இட்லி குண்டு, கோ-43, கருப்பு கவுனி நெல் ரகங்களை விவசாயிகள் பயிரிட்டனர். இந்தாண்டு நோய் பாதிப்பில்லை. நீர் வினியோகமும் சீராக இருந்-தது. வானிலை மாற்றத்தாலும் பிரச்னை இல்லை. இதனால் அதிக விளைச்சல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். நெல்லும் தரமானதாக இருக்கும். எனவே அரசு உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். கடந்தாண்டு, 14 கொள்முதல் நிலையம் திறக்கப்-பட்டது. அதுபோல் இந்தாண்டும் தேவையான நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

