ADDED : அக் 21, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர், ஆப்பக்கூடல் ஆ.கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல், 55; பர்கூர்மலையில் தேவர்மலையில் தங்கி ஐந்தாண்டுகளாக விவசாயம் செய்து வந்தார்.
தாமரைக்கரையிலிருந்து தேவர்மலைக்கு டி.வி.எஸ்., எக்எஸ் வாகனத்தில் நேற்று மதியம் சென்றார். தாமரைக்குளம் அருகில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து மொபட் சாய்ந்ததில் சம்பவ இடத்தில் இறந்தார். பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.