ADDED : ஜூலை 22, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம், கடம்பூர்மலை, பவளக்குட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயி சின்னையன், 57; நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு நடந்து சென்றார்.
அப்போது வந்த ஒற்றை யானை தாக்கி, மிதித்ததில் சம்பவ இடத்தில் பலியானார். கடம்பூர் வனத்துறையினர் உடலை மீட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.