ADDED : அக் 10, 2025 01:38 AM
அ நிறம் | அளவு
காங்கேயம், காங்கேயம் அருகே மறவபாளையம், மாரம்பள்ள தோட்டத்தை சேர்ந்தவர் சின்னசாமி, 60; விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை, எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வீட்டருகே சென்றபோது நிலை தடுமாறி விழுந்ததில்
தலையில் பலத்த காயமடைந்தார். மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இறந்தார். இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
