ADDED : மார் 12, 2026 04:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே புள்ளசெள்ளிவ-ளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார், 36, விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு, 7:00 மணியளவில் வெள்ளகோவில் மூலனுார் ரோடு, கரட்டுப்பாளையம் அருகே ஹோண்டா பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த, பொலிரோ சரக்கு வாகனம் மோதியதில் சதீஷ்குமார் பலத்த காய-மடைந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு, காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரி-சோதித்த டாக்டர்கள், சதீஷ்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்-தனர். வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

