ADDED : மார் 05, 2026 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி. என். பாளையம்: டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் விவசாயி பழனிசாமி, 76. இவரது மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மைசூரை சேர்ந்த ரெஸ்டாரன்ட் மேலாளரான கோகுல், 28, என்பவர் தன் மனைவி, இரண்டு குழந்தைகளுடன் மொபட்டில் ஊட்டியில் இருந்து மைசூருக்கு, கள்ளிப்பட்டி பகுதியில் உள்ள தனியார் கிளினிக் அருகே வந்துள்ளார்.
அப்போது, நண்பரை சந்தித்து விட்டு, அத்தாணி சாலையை பழனிசாமி கடக்க முற்பட்டபோது, கோகுல் ஓட்டி வந்த மொபட் மோதியது. இந்த விபத்தில் துாக்கி வீசப்பட்ட பழனிசாமி படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பங்களாப்புதுார் போலீசார், விபத்தில் உயிரிழந்த பழனிசாமியை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

