/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கரூர் மாவட்டத்தில் வாழைத்தார் வரத்து அதிகரிப்பு எதிர்பார்த்த விலை இல்லாததால் விவசாயிகள் சோகம்
/
கரூர் மாவட்டத்தில் வாழைத்தார் வரத்து அதிகரிப்பு எதிர்பார்த்த விலை இல்லாததால் விவசாயிகள் சோகம்
கரூர் மாவட்டத்தில் வாழைத்தார் வரத்து அதிகரிப்பு எதிர்பார்த்த விலை இல்லாததால் விவசாயிகள் சோகம்
கரூர் மாவட்டத்தில் வாழைத்தார் வரத்து அதிகரிப்பு எதிர்பார்த்த விலை இல்லாததால் விவசாயிகள் சோகம்
ADDED : அக் 03, 2025 01:37 AM
கரூர் கரூர் மாவட்டத்தில், காவிரி கரையோர பகுதிகளான வேலாயுதம்பாளை
யம், புகளூர், வாங்கல், திருமூக்கூடலுார், மாயனுார், லாலாப் பேட்டை, குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் வாழைத்தார் சாகுபடி நடக்கிறது. கடந்த, ஜூன் மாதம் முதல் மேட்டூர் அணை யில் இருந்து, குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதை தவிர, அமராவதி அணை, பவானி சாகர் அணை மற்றும் நொய்யல் ஆறுகளில் வந்த தண்ணீரும் காவிரியாற்றில் கலந்தது. மேலும், கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், வாழைத்தார் சாகுபடி அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கடந்த மாதத்தில், மகாளய அமாவாசை அனுசரிக்கப்பட்டது. நேற்று முன்தினம் ஆயுதபூஜை, நேற்று விஜயதசமி விழா கொண்டாப்பட்டது. கரூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து, வாழைத்தார்கள் மார்க்கெட்டுக்கு கொண்டு
வரப்பட்டன.
கடந்த வாரம், 300 ரூபாய்க்கு விற்ற பூவன், 600 ரூபாய்க்கும், 350 ரூபாய்க்கு விற்ற கற்பூரவள்ளி, 450 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கு விற்ற பச்சை நாடான், 400 ரூபாய்க்கும் நேற்று ஏலம் போனது.
இதுகுறித்து, வாழை விவசாயிகள், வியாபாரிகள் கூறியதாவது:
கடந்தாண்டை விட, நடப்பாண்டு வாழைத்தார் வரத்து அதிகரித்துள்ளது. இதற்கு, மாநிலம் முழுவதும் பெய்த மழை தான் காரணம். வரத்து அதிகரிப்பால், விலை எதிர்பார்த்த அளவில் உயரவில்லை. கடந்தாண்டு பூவன் தார், 600 ரூபாய் முதல், 900 ரூபாய் வரை விலை போனது.
நடப்பாண்டு அதிகப்பட்சமாக, 600 ரூபாய்க்குதான் விலை போனது. வரும் தீபாவளி, கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணியும் காலங்களில், வாழை விலை சற்று உயர வாய்ப்புள்ளது.
இவ்வாறு தெரிவித்தனர்.