/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை
/
நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை
நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை
நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஏப் 07, 2025 02:10 AM
ஈரோடு: தடப்பள்ளி - அரக்கன்கோட்டை - பவானி நதி பாசன விவசா-யிகள் சங்க தலைவர் சுபி.தளபதி, ஈரோடு கலெக்டர் அலுவல-கத்தில் வழங்கிய மனுவில் கூறியதாவது: கொடிவேரி அணை பாசன ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக நெல் அறுவடை பணி வரும், 10 முதல் துவங்க உள்ளது.
இதை கருத்தில் கொண்டு, அரசின் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் (டி.பி.சி.,), அரக்கன்கோட்டை பாசனப்பகுதியில் கள்-ளப்பட்டி, கொண்டையம்பாளையம், டி.என்.பாளையம், ஏலுார், நஞ்சை துறையம்
பாளையம், புதுவள்ளியம்பாளையம், காசிபாளையம், கூகலுார், கரட்டடிபாளையம், கருங்கரடு, சவண்டப்பூர், பெருந்தலையூர், மேவானி பகுதியில், வரும், ௧௦ம் தேதி தொடங்க வேண்டும். பிற கொள்முதல் நிலையங்கள், 15ம்தேதி முதல் துவங்கிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

