ADDED : அக் 05, 2025 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும், 10ம் தேதி காலை, 11:00 மணிக்கு ஈரோடு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடக்கிறது. ஈரோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி தாலுகா பகுதி
விவசாயிகள், விவசாய நிலங்களை அளவீடு செய்தல், விவசாய நிலங்கள், பாதைகள், ஓடை ஆக்கிரமிப்பு அகற்றுதல் போன்ற கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம் என்று, ஆர்.டி.ஓ., சிந்துஜா கேட்டு கொண்டுள்ளார்.