ADDED : ஆக 07, 2025 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கோபி அருகே தந்தை மாயமானதாக, கடத்துார் போலீசில் மகன் புகாரளித்துள்ளார். கோபி அருகே மாக்கினாங்கோம்பையை சேர்ந்தவர் சுப்பிரமணியம், 69. இவரை கடந்த, 2ம் தேதி முதல் காணவில்லை.
அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடு என எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரின் மகன், கார்த்திக்குமார், 42, கொடுத்த புகாரின்படி, கடத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.