ADDED : செப் 26, 2024 02:36 AM
ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம் ராஜாஜிபுரம் வரகப்பா வீதியில் உள்-ளது மாஸ் பேப்பர்ஸ். பழைய பேப்பர்களை வாங்கி பல்வேறு ஆலைகள், நிறுவனங்களுக்கு அனுப்பி வருகின்றனர். இதன் உரி-மையாளர் மாரியப்பன். நேற்று இரவு, 9:30 மணியளவில் இக்க-டையில் இருந்து கரும்புகை வெளியேறியது. பொதுமக்கள் ஈரோடு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சென்று அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்துள்ளது. மின் கசிவு கார-ணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. தேவாலயத்தில் திருட்டுதாராபுரம்:
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் தேவாலயத்தில் புகுந்து, மர்ம நபர் திருடி செல்லும் காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தாராபுரத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில், நேற்று முன்தினம் மதியம், யாரும் இல்லாத நேரத்தில் புகுந்த அடையாளம் தெரி-யாத நபர் ஒருவர், அங்கிருந்த உண்டியலில் இருந்து பணத்தை திருடி
செல்லும் காட்சி, நேற்று சமூக வலைதளங்களில் பரவியது. இதனால், மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து, தாராபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

