ADDED : ஏப் 27, 2025 04:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி அருகே காசிபாளையத்தை சேர்ந்தவர் பொன்னாத்தாள், 50; அதேபகுதியில் ஓட்டு கட்டடத்தில் சிறியளவில் மளிகை கடை வைத்துள்ளார். கடையில் நேற்று மதியம், 2:30 மணிக்கு,
திடீரென கரும்புகையுடன் தீப்பற்றி எரிந்தது. கோபி தீயணைப்பு துறையினர் கடைக்குள் இருந்த மளிகை பொருட்களை வெளியேற்றி, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் கடைக்குள் இருந்த தட்டுமுட்டு சாமான்கள் எரிந்து விட்டது.