sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வெள்ளகோவில் அருகே நுால் மில்லில் தீ விபத்து

/

வெள்ளகோவில் அருகே நுால் மில்லில் தீ விபத்து

வெள்ளகோவில் அருகே நுால் மில்லில் தீ விபத்து

வெள்ளகோவில் அருகே நுால் மில்லில் தீ விபத்து


ADDED : டிச 27, 2024 01:28 AM

Google News

ADDED : டிச 27, 2024 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம், டிச. 27-

வெள்ளகோவில் அருகே, நுால் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பாலனாது.

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் தீர்த்தாம்பாளையத்தை சேர்ந்தவர் கதிர்வேல், 51. இவர், சேரன் நகரில் பெரியநாயகி அம்மன் என்ற பெயரில், கழிவு பஞ்சில் இருந்து நுால் தயாரிக்கும் மில்லை, மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறார். 60க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். நேற்று காலை, 6:30 மணியளவில் மில்லின் ஒரு பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. இதையடுத்து அங்குள்ள பணியாளர்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் தீ கட்டுக்கடங்காமல் போனதால், காங்கேயம் தீயணைப்பு நிலைய வீரர்களும் சேர்ந்து, மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் மிஷின், பஞ்சு என லட்சக்கணக்கில் சேதமாகியுள்ளது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது.வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us