sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பழைய துணி குடோனில் தீ விபத்து

/

பழைய துணி குடோனில் தீ விபத்து

பழைய துணி குடோனில் தீ விபத்து

பழைய துணி குடோனில் தீ விபத்து


ADDED : மார் 15, 2026 07:21 AM

Google News

ADDED : மார் 15, 2026 07:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோட்டில் பழைய துணி குடோனில் ஏற்பட்ட தீயால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு பி.பெ.அக்ரஹாரத்தை அடுத்த சுண்ணாம்பு ஓடை பகு-தியில், பவானி பிரதான சாலையில், அலிசா ஓல்ட் கார்மெண்ட்ஸ் என்ற பழைய துணி குடோன் உள்ளது. இதன் உரிமையாளர் ஆரிப், 61; குடோன் அருகில் வி.ஜி.பி., நகரில் வசிக்கிறார்.

நேற்று மதியம், 12:45 மணியளவில் குடோனில் இருந்து கரும்-புகை வந்தது. அப்பகுதியினர் தகவல் தந்ததும், ஆரிப் வந்து குடோனை திறந்தார். பின்னர் ஈரோடு தீயணைப்பு நிலையத்-துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இரு வாகனங்களில் தீய-ணைப்பு நிலைய வீரர்கள் விரைந்தனர். அதற்குள் தீ கொழுந்து விட்டு, பல அடி உயரத்துக்கு புகையும், ஜூவாலையும் கிளம்பி-யது.

தீ ஜூவாலையால் குடோன் பின்னால் இருந்த வீடுகளின் சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டது. பிளாஸ்டிக் பொருட்கள் உருகி-யது. குடோனை சுற்றி வீடுகள் ஏராளமாக உள்ளன. தீ விபத்தால் ஏற்பட்ட புகையால், மக்கள் மூச்சு விட சிரமம் ஏற்பட்டது. சிலருக்கு கண் எரிச்சல் போன்ற உபாதை ஏற்பட்டது.

பவானி பிரதான சாலை என்பதால், விபத்தை காண மக்கள், வாகன ஓட்-டிகள் கூட்டம் கூடி, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பழைய துணிகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. மதியம், 1:45 மணிக்கு தீயை முழுமையாக கட்டுப்படுத்தினாலும், 4:00 மணி வரை தொடர்ந்து குடோனில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து, கருங்கல்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us