ADDED : பிப் 04, 2025 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம், குயிலன்தோப்பு பொன்னுசாமி வீதி அருகே, அடர்ந்த காட்டுப்பகுதி உள்ளது. அங்கு குப்பை நிறைந்து காணப்பட்டது. வெயிலால் மரம், செடி-கொடி, புல் காய்ந்து காணப்பட்டது. நேற்று மதியம் திடீரென குப்பையில் தீப்பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ பரவியது. ஈரோடு தீய-ணைப்பு நிலைய வீரர்கள் அரை மணி நேரம்
போராடி தீயை அணைத்தனர். அணைக்காமல் வீசப்பட்ட பீடி அல்லது சிக-ரெட்டால் தீப்பிடித்திருக்கலாம் என கருதப்படுகிறது.