நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : ஈரோட்டில் வெயில் சுட்டெரிப்பதால் புற்கள், மரம், செடி, கொடிகள் காய்ந்து சருகாக காட்சியளிக்கிறது.
சமீப நாட்களாக ஆங்காங்கே காய்ந்த புற்களில் தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணிக்கு சாஸ்திரி நகர் பகுதியில் ரயில் தண்டவாளத்தை ஒட்டிய, காய்ந்த புற்களில் தீ விபத்து ஏற்பட்டது. இதை பார்த்த அப்பகுதியினர் ஈரோடு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள், 20 நிமிடம் போராடி தீயை அணைத்தனர்.