/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாரியூரில் மலர் பல்லக்கு ஊர்வலம் கோலாகலம்
/
பாரியூரில் மலர் பல்லக்கு ஊர்வலம் கோலாகலம்
ADDED : ஜன 13, 2025 02:56 AM
கோபி: கோபி அருகே பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் குண்டம் மற்றும் தேரோட்டத்தை தொடர்ந்து, மலர் பல்லக்கு ஊர்வலம் நேற்று நள்ளிரவு துவங்கியது.
கோவிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலம், பதி, வெள்ளாளபா-ளையம் பிரிவு, முருகன்புதுார், நஞ்சகவுண்டன்பாளையம் பிரிவு, மேட்டுவலவு வழியாக கோபி நகரை அடைந்தது. வழிநெடு-கிலும் பக்தர்கள் விடியவிடிய காத்திருந்து, பல்லக்கில் பவனி வந்த அம்மனை தரிசித்தனர். இன்னும் சில பக்தர்கள் அம்ம-னுக்கு தேங்காய், பழம் வழங்கி பூஜை செய்து வணங்கினர். பின் சரவணா தியேட்டர் சாலை, பெருமாள் கோவில் வீதி, ராஜவீதி, கடைவீதி வழியாக, கோபி பெருமாள் கோவிலை ஊர்வலம் அடைந்தது. ஜொலிக்கும் அலங்கார பல்புகளால் அலங்கரிக்கப்-பட்ட மலர் பல்லக்கில் அம்மன் பவனி வந்ததால், பாரியூர் சாலை முதல், கோபி டவுன் பகுதி வரை நேற்று விழாக்கோலம் பூண்டது.