/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாணவர்களுக்கு உதவித்தொகை தருவதாக அரங்கேறும் மோசடி
/
மாணவர்களுக்கு உதவித்தொகை தருவதாக அரங்கேறும் மோசடி
ADDED : ஆக 25, 2025 02:33 AM
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி மற்றும் பவானிசாகர் சுற்றுவட்டார பகுதி-களில், கல்வி துறையை பயன்படுத்தி, மாணவர்
களுக்கு உதவித்தொகை மற்றும் சலுகை என்ற பெயரில், மோச-டிக்கான மொபைல் அழைப்பு அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து மக்கள் கூறியதாவது: மொபைல் போனுக்கு வாட்ஸ் ஆப் அழைப்பு (+91 92110 67429 என்ற எண்ணில் இருந்து வந்-தது. அதில் பேசியவர், கல்வித்துறையில் இருந்து பேசுகிறோம்; உங்கள் மாணவருக்கு ஸ்காலர் ஷிப் வந்துள்ளது. அதைப்பெற ஸ்கேனர் மூலம் நாங்கள் அனுப்பும் க்யூ.ஆர். கோடை ஸ்கேன் செய்து பணம் அனுப்பவும் என்றார். பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்களை தெளிவாக கூறினார். அடையாள அட்டையை வாட்ஸ்ஆப்பில் அனுப்புமாறு கேட்டதற்கு இணைப்பை துண்-டித்து விட்டார். மீண்டும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதேபோல் பத்துக்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு வந்துள்-ளது. இவ்வாறு கூறினர்.இதுகுறித்து கல்வித்துறை
அதிகாரிகள் கூறியதாவது:
மாணவர்களின் வங்கி கணக்கு எண் உள்ளிட்ட அனைத்து விப-ரங்கள் குறித்து அந்தந்த பள்ளிகள் மூலம் தகவல் பெறப்படுகின்-றன. இது தவிர எந்த தகவலையும், போன் மூலம் கல்வித்துறை கேட்பதில்லை. மாணவர்கள் வங்கி கணக்கு தொடர்பான எந்த தகவலையும் யாரிடமும் பரிமாறக்கூடாது. அதையும் மீறி கணக்கில் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டால், 24 மணி நேரத்-திற்குள் அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவிப்பதன் மூலம், பணத்தை திரும்ப பெற முடியும். இவ்வாறு கூறினர்.

