ADDED : பிப் 15, 2026 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை: ஈரோடு மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், சென்னிமலை அரிமா சங்கம் மற்றும் கொங்கு வேளாளர் அறக்கட்டளை அமைப்புகள், கோவை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து, சென்னிமலையில் உப்பிலிபாளையம் ரோட்டில் உள்ள காமராஜ் நகர் அரசு உயர்நிலைப்பள்ளியில், இலவச கண் சிகிச்சை முகாமை இன்று நடத்துகிறது. காலை, 9:௦௦ மணி முதல் மதியம், 1:௦௦ மணி வரை நடக்கிறது.
தீத்தடுப்பு விழிப்புணர்வுஅந்தியூர்: அந்தியூர் அருகே அத்தாணி வனச்சரகத்துக்கு உட்பட்ட தொட்ட-கோம்பை, கிணத்தடி சோளகா ஆகிய வன கிராமம் மற்றும் வனத்தை ஒட்டிய பகுதியில், வனத்துறை சார்பில் தீத்தடுப்பு விழிப்புணர்வு நேற்று நடந்தது. அத்தாணி பிரிவு பாரஸ்டர் பாரதி தலைமையில், வனம் மற்றும் வன விலங்கு பாதுகாப்பு குறித்தும்,
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

