/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆயுள் தண்டனை கைதி புயல் நிவாரணத்துக்கு நிதி
/
ஆயுள் தண்டனை கைதி புயல் நிவாரணத்துக்கு நிதி
ADDED : பிப் 21, 2024 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:அந்தியூர்,
ஜி.எஸ்.காலனி, கள்ளிமடை குட்டை, முஸ்தபா தோட்டத்தை சேர்ந்தவர்
தனபால், 45; கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, சென்னை புழல் சிறையில்
உள்ளார்.
இதுவரை, 19 ஆண்டுகள் ஏழு மாதங்கள் சிறையில் கழித்துள்ளார்.
கடந்த, 14ம் தேதி தந்தையை பார்க்க பரோலில் சொந்த ஊர் வந்தார். நாளை
சிறையில் ஆஜராக வேண்டும். சிறையில் பல்வேறு பணிகளை செய்யும் இவருக்கு
மாத ஊதியம் வழங்கப்படுகிறது. தனது ஒரு மாத சம்பளமான, 3,400 ரூபாயை,
சென்னை மிக்ஜாம் புயல் நிவாரண நிதிக்காக, முதல்வர் பெயருக்கு டி.டி.,
எடுத்து, பதிவு தபாலில் அனுப்பியுள்ளார்.

