/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி
/
ஈரோட்டில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி
ADDED : மார் 08, 2024 07:21 AM
ஈரோடு : இந்திய அரசு மத்திய பனை பொருட்கள் நிறுவனம் சார்பில், ஈரோட்டில் மேட்டூர் சாலையில் உள்ள ஜெம் அண்ட் ஜுவல்லரி டெக்னாலஜி பயிற்சி நிலையத்தில், தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
வரும், 14ம் தேதி முதல் 25-ம் தேதி வரை பயிற்சி நடக்கிறது. இதில், 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பில்லை. கல்வி தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி போதும். பயிற்சி நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்கள் தேசிய கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் நகை அடகு நிதி நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளர் பணியில் சேரலாம். மேலும் சுயமாக நகை கடை, நகை அடமான கடை நடத்தலாம். பயிற்சியில் சேர விரும்புவர்கள் மூன்று ஸ்டாம்ப் சைஸ் போட்டோ, முகவரி சான்றிதழ், கல்வி சான்றிதழ், பயிற்சி கட்டணம், 5,300 ரூபாய், ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து, 6,254 ரூபாய் செலுத்த வேண்டும். கூடுதல் விபரங்கள் பெற, 94437-28438 என்ற மொபைல் எண்ணை அணுகலாம்.

