ADDED : பிப் 16, 2026 04:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரத்தில் இருந்து மேட்டுப்பாளையம் - தஞ்சாவூர், கோவை - பழனி, திருப்பூர், மதுரை உள்பட, ஐந்து வழித்தடங்களில், அரசு பஸ்கள் இயக்கத்தை, செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் சாமிநாதன், கொடியசைத்து நேற்று துவக்கி வைத்தார்.
பஸ்களில் ஏறி பயணிகளிடம் அமைச்சர் பேசினார். நிகழ்ச்சியில் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி, தி.மு.க., நகர செயலாளர் முருகானந்தம், அரசு போக்குவரத்து பொது மேலாளர் முத்து குமாரசாமி மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

