ADDED : டிச 02, 2025 02:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நம்பியூர், நம்பியூர் வட்டார தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நம்பியூர் தாலுகா அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டக்கிளை தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார்.
மத்திய அரசின் ஊழியர் விரோத தொழிற்சங்க சட்டங்களை திரும்ப பெற வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, கோபி தாலுகா அலுவலகம் முன், வட்டத்தலைவர் கோபாலன் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

