ADDED : செப் 27, 2024 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தாராபுரம், செப். 27-
புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். தேசிய கல்வி கொள்கையை கைவிட வேண்டும் என்பது உள்பட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தாராபுரம் தாசில்தார் அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்ட கிளை பொருளாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். வட்டக்கிளை செயலாளர் தில்லையப்பன், செயலாளர்கள் சுமதி, தேவகி உட்பட பலர் பங்கேற்றனர்.

