ADDED : ஜூலை 29, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மையம் சார்பில், மாவட்ட செயலர் வெங்கிடு தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பத்துார் போலீஸ் ஸ்டேஷனில், டவுன் பஞ்., அதிகாரி தனுஷ்கோடி தாக்கப்பட்டுள்ளார்.
இதற்கான கண்காணிப்பு கேமரா பதிவை வெளியிட வேண்டும். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீதும், போலீஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். பல்வேறு சங்க நிர்வாகிகள் பழனிசாமி, பரமசிவம், செந்தாமலர், கண்ணன், கோமதி உட்பட பலர் பேசினர்.