sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பனியன் நிறுவன பஸ் மோதி அரசுப்பள்ளி மாணவி பலி

/

பனியன் நிறுவன பஸ் மோதி அரசுப்பள்ளி மாணவி பலி

பனியன் நிறுவன பஸ் மோதி அரசுப்பள்ளி மாணவி பலி

பனியன் நிறுவன பஸ் மோதி அரசுப்பள்ளி மாணவி பலி


ADDED : ஜூலை 06, 2025 01:05 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி, பவானிசாகர் அருகே கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் ரமேஷ், 40, எலக்ட்ரீசியன். இவரின் மகள் ஷயிலேஷினி, ௧௧; தொட்டம்பாளையம் அரசு பள்ளி ஆறாம் வகுப்பு மாணவி. நேற்று பள்ளி விடுமுறை என்பதால் வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்று மிட்டாய் வாங்கியவர், வீட்டுக்கு திரும்பினார்.

பவானிசாகர்-பண்ணாரி சாலையில், காமராஜ் நகர் பாலம் அருகே சாலையை கடந்தபோது, அதிவேகமாக வந்த திருப்பூர் தனியார் (எஸ்.சி.எம்., டெக்ஸ்) பனியன் நிறுவன பஸ் மோதியது.

இதில் துாக்கி வீசப்பட்ட மாணவி சம்பவ இடத்தில் பலியானார். அதேசமயம் விபத்து காரணமாக பஸ் நிலை தடுமாறி சாலையோர தடுப்புகளின் மீது மோதி பள்ளத்தில் இறங்கி நின்றது. பவானிசாகர் போலீசார் மாணவி உடலை மீட்டு சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

பஸ் டிரைவரான சத்தியமங்கலத்தை சேர்ந்த கோபால்சாமியிடம், 35, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேகத்தடை தேவை

அதி வேகமாக பஸ் வந்ததே விபத்துக்கு காரணம். இப்பகுதி வழியாக தேங்காய் மட்டை ஏற்றி செல்லும் லாரிகள், அதிவேகத்தில் செல்கின்றன. எனவே வேகத்தை கட்டுப்படுத்த இப்பகுதியில் பேரிகார்டு வைக்க வேண்டும். நிரந்தர தீர்வாக வேகத்தடை அமைக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். விபத்தை தொடர்ந்து காமராஜ் நகர் பாலம் அருகில், போலீசார் பேரிகார்டு வைத்தனர்.






      Dinamalar
      Follow us