/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசு போக்குவரத்து ஊழியர் ஆர்ப்பாட்டம்
/
அரசு போக்குவரத்து ஊழியர் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 14, 2025 02:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், காங்கேயம் பழையகோட்டை ரோட்டில் உள்ள, அரசு போக்குவரத்து கழக காங்கேயம் பணிமனை முன், அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.
பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வு தொழிலாளர்களின் பணப்பலன், பணியில் இறந்த தொழிலாளியின் வாரிசுகளுக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தினர். விவசாய தொழிலாளர் சங்க சி.ஐ.டி.யு., வேலுச்சாமி, ஓய்வு பெற்ற தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.