/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பட்டதாரி வாலிபர் மின்சாரம் தாக்கி பலி
/
பட்டதாரி வாலிபர் மின்சாரம் தாக்கி பலி
ADDED : அக் 22, 2025 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர், வெள்ளித்திருப்பூர் அருகே ஒலகடம் தாசகவுண்டன் காட்டுக்கொட்டகையை சேர்ந்த அர்ஜூனன் மகன் சந்திரகுமார், 25; பட்டதாரி. நேற்று முன்தினம் இரவு வீட்டில் புல் வெட்டும் இயந்திரத்தில், தட்டு வெட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது மின்சாரம் பாய்ந்து விழுந்தார். சுய நினைவில்லாமல் கிடந்தவரை மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.வரட்டுப்பள்ளம் அணை

