ADDED : செப் 17, 2024 07:29 AM
ஈரோடு: ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கலைசெல்வி தலைமையில், நாளை காலை, 11:00 மணிக்கு மின் பயனீட்டாளர் மாதாந்திர குறைதீர் கூட்டம் நடக்கிறது.
பெருந்துறை, சேனிடோரியம், கருமாண்டிசெல்லிபாளையம், துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில் பெருந்துறை, வெள்ளோடு, ஈங்கூர், கொடுமணல், சென்னிமலை கவுண்டச்சிபாளையம், விஜயமங்கலம், பிடாரியூர், புதுப்பாளையம், நல்லாம்பட்டி பகுதி பயனீட்டாளர்கள் குறை, கோரிக்கைகளை மனுவாக வழங்கி தீர்வு பெறலாம்.
* கோபி மின் பகிர்மான வட்டத்தின், சத்தி பகுதி மின் உபயோகிப்பாளருக்கான, மாதாந்திர குறைதீர் கூட்டம், நாளை காலை, 11:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை, அத்தாணி சாலையில் உள்ள செயற்பொறியாளர் ஆபீசில் நடக்கிறது.சத்தி கோட்ட பகுதி மின் நுகர்வோர், குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம்.