/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பகவதி அம்மன் கோவிலில் குண்டம் விழா தொடக்கம்
/
பகவதி அம்மன் கோவிலில் குண்டம் விழா தொடக்கம்
ADDED : மார் 15, 2024 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.என்.பாளையம்:கள்ளிப்பட்டி
அருகேயுள்ள கணக்கம்பாளையத்தில், பிரசித்தி பெற்ற பகவதி அம்மன்
கோவிலில், நடப்பாண்டு குண்டம் விழா பூச்சாட்டுதல் நேற்று நடந்தது.
முன்னதாக காலையில் கிராம சாந்தி நடந்தது. மதியம், 12:30 மணிக்கு
பூச்சாட்டுதல் நடந்தது. வரும், 27ம் தேதி இரவு குண்டத்துக்கு தீ
மூட்டப்படுகிறது. 28ம் தேதி அதிகாலை குண்டம் இறங்கும் நிகழ்ச்சி
நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் தீ மிதித்து அம்மனை வழிபடுவர்.

