/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெருமாநல்லுார் கோவிலில் நாளை குண்டம் விழா
/
பெருமாநல்லுார் கோவிலில் நாளை குண்டம் விழா
ADDED : ஏப் 07, 2025 02:43 AM
அனுப்பர்பாளையம்: பெருமாநல்லுார் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் நாளை பக்தர்கள் குண்டம் இறங்குகின்றனர். இன்றும், நாளையும் போக்-குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பெருமாநல்லுாரில் உள்ள பிரசித்தி பெற்ற கொண்டத்துக்காளியம்-மன் கோவிலில், குண்டம் திருவிழா, கடந்த 2ம் தேதி கொடியேற்-றத்துடன் தொடங்கியது. நாளை (8ம் தேதி) அதிகாலை பக்தர்கள் குண்டம் இறங்குகின்றனர். அன்று மாலை தேரோட்டம் நடைபெ-றும். இதில் ஆயிரக்கணக்கானோர் குவிவர். குண்டம் திருவிழா-வையொட்டி, பெருமாநல்லுாரில், இன்று (7ம் தேதி) மதியம் முதல் 8ம் தேதி இரவு வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்-பட்டுள்ளது.கோபி மற்றும் ஈரோட்டில் இருந்து திருப்பூர் செல்லும் வாகனங்-கள் விவசாயிகள் நினைவு ஸ்துாபியில் இருந்து, நெருப்பெரிச்சல், பூலுவபட்டி வழியாக திருப்பூர் செல்ல வேண்டும். திருப்பூரில் இருந்து, கோபி, ஈரோடு செல்லும் வாகனங்கள் பூலுவபட்டி, நெருப்பெரிச்சல், கணக்கம்பாளையம் வழியாக விவசாய ஸ்துாபி சென்று அங்கிருந்து செல்ல வேண்டும்.
ஈரோட்டில் இருந்து கோவை செல்லும் பஸ்கள், விவசாய ஸ்துாபி அருகே பயணிகளை இறக்கி விட்டு தேசிய நெடுஞ்சா-லையில் செல்ல வேண்டும். அதுபோல், கோவையில் இருந்து ஈரோடு, சேலம் செல்லும் பஸ்கள் ஈட்டி வீரம்பாளையம் பாலத்-தில் பயணிகளை இறக்கி விட்டு நெடுஞ்சாலையில் செல்ல வேண்டும்.
பைக் மற்றும் வாகனங்களில் வரும் பக்தர்கள் தங்கள் வாகனங்-களை நிறுத்த கோபி, ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய நான்கு ரோடு பகுதிகளிலும் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

