/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கஞ்சா வழக்கில் கைதான இருவருக்கு குண்டாஸ்
/
கஞ்சா வழக்கில் கைதான இருவருக்கு குண்டாஸ்
ADDED : ஜன 15, 2026 05:06 AM
ஈரோடு: ஈரோட்டில் விற்பனை செய்வதற்காக முறையே 5 மற்றும், 2.900 கிலோ கஞ்சாவை வைத்திருந்ததாக, திருவாரூர் குடவாசல் விஸ்வநாதபுரத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் முருகேசன், 31, ஈரோடு சேனாதிபதி பாளையம் கனகராஜ் மகன் நாகேந்திரன், 21, ஆகிய இருவரை ஈரோடு மது
விலக்கு அமலாக்க பிரிவு போலீசார், கடந்த மாதம் கைது செய்து, கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என எஸ்.பி., சுஜாதா பரிந்துரைத்தார். ஈரோடு கலெக்டர் கந்தசாமி பரிசீலனை செய்து, இருவரையும் குண்-டாசில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதன்படி, நேற்று இருவரும் கோபியில் இருந்து கோவை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

