/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பு.புன்செய்புளியம்பட்டி வாலிபர் மீது 'குண்டாஸ்'
/
பு.புன்செய்புளியம்பட்டி வாலிபர் மீது 'குண்டாஸ்'
ADDED : அக் 17, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு புன்செய் புளியம்பட்டி நேரு நகரை சேர்ந்த தனபால் மகன் ரோகித், 22; இவர் மீது திருட்டு, கொள்ளை, அடிதடி உட்பட, 15 குற்ற வழக்குகள் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ளன. சில வாரங்களுக்கு முன் ஒரு குற்ற சம்பவத்தில் கைது செய்யப்பட்டு, மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு வருவதால், ரோகித்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க, எஸ்.பி., மூலம் போலீசார் கலெக்டருக்கு பரிந்துரைத்தனர். கலெக்டர் கந்தசாமி பரிசீலனையை ஏற்றதால், ரோகித் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதையடுத்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.