/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குக்கிராமங்கள் இணைப்பு: கருத்து தெரிவிக்கலாம்
/
குக்கிராமங்கள் இணைப்பு: கருத்து தெரிவிக்கலாம்
ADDED : ஜன 09, 2026 05:01 AM
ஈரோடு: நம்பியூர், பவானிசாகர், அம்மாபேட்டை, பெருந்துறை, மொடக்-குறிச்சி யூனியனுக்கு உட்பட்ட, 21 குக்கிராமங்கள் அருகே உள்ள பஞ்.,களுடன் இணைத்து மறுசீரமைத்து, ஈரோடு மாவட்ட அரசி-தழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
புதிதாக இணைக்கப்பட்ட குக்கிராமங்கள், வரும் சாதாரண தேர்த-லுக்கு வார்டுகள் பிரிக்கப்படும். பஞ்., பகுதிகளில் குடியி-ருப்போர், ஈரோடு மாவட்ட அரசிதழில் இந்த அறிவிக்கை வெளி-யிடப்பட்டதில் இருந்து, 30 நாட்களுக்குள் மறுப்பு தெரிவிக்க விரும்பினால், எழுத்து மூலம் அரசுக்கு மேல்முறையீடு செய்-யலாம். மறுப்பை, 'அரசு கூடுதல் தலைமை செயலர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, தலைமை செயலகம், சென்னை-600009' என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

