ADDED : மே 11, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை உதவியுடன், குழந்தைகளுக்கான இருதய குறைபாடு கண்டறியும் சிகிச்சை முகாம், ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நடந்தது.
அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். உறைவிட மருத்துவர் சசிரேகா, குழந்தைகள் நல டாக்டர் சீனிவாசன், இருதய டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். இதில், 350க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பரிசோதனை, சிகிச்சை மற்றும் பரிந்துரை வழங்கப்பட்டது.

